19/11/2024

பெற்றவர் வாழ்த்தவே

 

பெற்றவர் வாழ்த்தவே
....சுற்றமும் போற்றவே
......பெற்றவை போத வில்லையே!
பற்றிட எண்ணுதே
.....அற்பனின் உள்ளமே
.......பற்றிடும் நேரம் தொல்லையே!
கற்றவைக் கொஞ்சமே
....கற்பனை விஞ்சுமே
........கற்றிடக் காலம் எல்லையே!
உற்றதைக் கொள்ளவே
......மற்றதைத் தள்ளவே
.......உற்றுணர் ஞானம் வல்லையே!

No comments: