குறைகூறும் கூட்டத்தைக்
....குறையென்றே எண்ணாமல்
.......குறிக்கோளை நீ அடைவாய்!
மறைகூறும் ஞானத்தை
.....மடைமாற்றிப் பாராமல்
பறைசாற்றும் வீரத்தை
.....பதிலென்றே எண்ணாமல்
........படியேறிப் பதிலளிப்பாய்!
இறைதேடும் நாட்டத்தில்
......இமியளவும் சோராமல்
..........இனியேனும் விரைந்திடுவாய்!
No comments:
Post a Comment