14/11/2024

அணுமுதல் அண்டமாய் ஆனவன் நீயே!

 


அணுமுதல் அண்டமாய் ஆனவன் நீயே!
சிணுங்கிடும் பிஞ்சிலே தேனுமிழ் நீயே!
கதிரவன் தீயிலே காண்பவன் நீயே!
மதியிலே மார்க்கமாய் வந்தவன் நீயே!
தமிழனைக் காட்டிடும் சான்றுகள் நீயே!
நிமிர்ந்திட வைத்திடும் வள்ளுவம் நீயே!
கவியிலே கண்டிடும் கற்பனை நீயே!
செவியிலே கேட்டிடும் சப்தமும் நீயே!
அருவமாய் ஆகிய ஆதியும் நீயே
இருள்வினை நீக்குவா யே!
✍️செ. இராசா

No comments: