03/04/2025

கண்ணு முன்னே நிக்கும் சாமி

 

பல்லவி
கண்ணு முன்னே நிக்கும் சாமி
தாயப்போல உண்டா காமி
அன்பை அள்ளித் தந்த சாமிடா...

அன்னம் ஊட்டி வளர்த்த சாமி
அம்மாபோல எங்க காமி?
உன்னை என்னை பெத்த சாமிடா...

அம்மா அம்மா அம்மா
எங்க சாமி அம்மா
சும்மா சும்மா சும்மா
நீ இல்லா வாழ்க்கை சொம்மா

ஏய்...
அம்மான்னா வேற யாருடா?!
அம்மான்னா சாமிதானடா(2)

சரணம்_1
தப்புசெஞ்சு வந்தபோதும்
தயவுகாட்டும் தாயைப்போல
எத்தனையோ சொந்தமிருந்தும்
என்னைக்குமே ஈடே இல்லை...

ஊரைச்சுத்தி வந்தபோதும்
ஒட்டிப்போன வயிரப்பார்த்தா
அச்சச்சோன்னு பதறிப்போகும்
அம்மாபோல பந்தம் இல்லை...

என்ன தவம் செஞ்சுப்புட்டோம்
உன்னிடத்தில் பிள்ளையாக..
என்ன இனி செய்யப்போறோம்
பெத்தகடன் பூர்த்தியாக...

அம்மா அம்மா அம்மா
எங்க சாமி அம்மா
சும்மா சும்மா சும்மா
நீ இல்லா வாழ்க்கை சொம்மா

ஏய்...
அம்மான்னா வேற யாருடா?!
அம்மான்னா சாமிதானடா(2)

சரணம்_2
சின்னப்புள்ள பெரியபுள்ள
பாகுபாடு பார்த்ததில்ல
கண்ணுக்கள்ள பாப்பாபோல
கண்ணவிட்டு போவதில்லை

தன்னலமே இருந்திடாத
தாயைப்போல யாருமில்லை
செஞ்சதுக்கு செய்யனும்னா
என்னைக்குமே ஆவதில்லை

நல்ல தேதோ செஞ்சிருக்கோம்
உன்னிடத்தில் பிள்ளையாக..
என்ன இனி செய்யப்போறோம்
பெத்தகடன் பூர்த்தியாக...

அம்மா அம்மா அம்மா
எங்க சாமி அம்மா
சும்மா சும்மா சும்மா
நீ இல்லா வாழ்க்கை சொம்மா

ஏய்...
அம்மான்னா வேற யாருடா?!
அம்மான்னா சாமிதானடா(2)

✍️செ. இராசா

No comments: