08/04/2025

இன்றைய தினம் என் மகனுக்கு

 


இன்றைய தினம் என் மகனுக்கு ஒரு முக்கியமான அற்புதமான நூலைப் பரிசளித்தேன். கண்டிப்பாக இந்த நூல் உன் வாழ்க்கையை மாற்றும் நூல் என்றும், இது நான் உனக்கு உன் வாழ்க்கைக்குத் தரும் மிக முக்கியமான பொக்கிஷம் என்றும் கருத வேண்டுமென்று கூறி வழங்கினேன்.
அவனும் ஆர்வத்தோடு வாங்கிப் படித்தது மட்டுமன்றி அவர் அம்மாவிற்கும் ஒவ்வொரு வரியாக மொழிபெயர்ப்பு செய்ததுகண்டு மிகவும் மனமகிழ்ச்சி அடைகிறேன்.

கண்டிப்பாகத் தமிழில் திருக்குறள் உட்பட எவ்வளவோ நல்ல நூல்கள் இருந்தாலும் அவரவர் வழியில் சென்றே புத்தக விருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதால் நான் மிகவும் விரும்பும் ராபின் சர்மா எழுதிய Who will cry when you die? என்ற அற்புதமான நூலைக் கொடுத்து படிக்க வைக்கும் முயற்சியில் வெற்றிபெற்றதாகவே உணர்கிறேன்.

பசங்க....பாடப் புத்தகத்தைத் தாண்டி படிக்க வேண்டும். அதுவும் வெளி உலகத்தை வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இந்தப் பட்டயப் படிப்பெல்லாம் வெறும் பணம் சம்பாதிக்க மட்டுமே. இலக்கியத் தேடல் கொண்ட படிப்பே வாழ்வை ருசிக்க வைக்கும், அதுவே சக மனிதனின் உணர்வுகளைத் தெளிவாகக் கடத்தும், அதுவே உற்ற தோழனாகக் கடைசிவரை வழிநடத்தும். அதுவே உண்மையான படிப்பு என்று ஆணித்தரமாக நம்புபவன் நான். அதை இந்தப் பசங்களுக்குப் புரிய வைக்க உண்மையில் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது. இருப்பினும் தொடங்குவோம்....நம்மில் இருந்தே...

✍️செ. இராசா

#robinsharma
#robinsharmaquotes
#robinsharmabook
#ineshraja
#Rajamanickam 

No comments: