03/04/2025

அன்பைத்தர என்றும் முனைபவன்

 

அன்பைத்தர என்றும் முனைபவன்
....அம்மன்வரம் என்றே நினைப்பவன்
........அன்னைத்தமிழ் ஒன்றால் வளர்பவன் தெரிவானோ?!
சென்னைத்தமிழ் கற்றே வருபவன்
..செம்மண்வள மண்ணில் பிறந்தவன்
.....சென்றானுயர் என்றே வியந்திட வருவோனோ?!
இன்னல்தரும் நட்பைக் கடந்தவன்
....எங்கும்பலர் காணத் தெளிந்தவன்
......இன்னும்ஒளி கிட்டா திருப்பது சரிதானோ?!
தன்னுள்தனை நன்றாய் அறிந்தவன்
....தம்மைத்தர என்றும் துணிந்தவன்
......தன்மெய்ப்புகழ் எங்கும் தெரிந்திட அருள்வாயோ?!
✍️செ. இராசா

No comments: