அன்பைத்தர என்றும் முனைபவன்
....அம்மன்வரம் என்றே நினைப்பவன்
........அன்னைத்தமிழ் ஒன்றால் வளர்பவன் தெரிவானோ?!
இன்னல்தரும் நட்பைக் கடந்தவன்
....எங்கும்பலர் காணத் தெளிந்தவன்
......இன்னும்ஒளி கிட்டா திருப்பது சரிதானோ?!
தன்னுள்தனை நன்றாய் அறிந்தவன்
....தம்மைத்தர என்றும் துணிந்தவன்
......தன்மெய்ப்புகழ் எங்கும் தெரிந்திட அருள்வாயோ?!

No comments:
Post a Comment