06/04/2025

கண்ணைக் காக்கும் இமைபோல

 

கண்ணைக் காக்கும் இமைபோல
.....கனியைத் தாங்கும் மரம்போல
மண்ணில் மாறும் நீர்போல
.....மலரால் வீசும் மணம்போல
விண்ணில் மின்னும் மீன்போல
.....விடிந்தால் தோன்றும் கதிர்போல
பெண்ணின் பெருமை காப்பீரே
.....பெரும்புகழ் பெற்று வாழ்வீரே!
✍️செ. இராசா

No comments: