15/04/2025

தனக்கென நினைப்பவர் தரித்திடும் எல்லை!

 

தனக்கென நினைப்பவர்
...தரித்திடும் எல்லை!
மனம்நிறை வடைந்தவர்
...மனத்தினில் இல்லை!
எனக்கென இனியெனில்
....இடர்வரும் தொல்லை!
நினைந்திட அவர்க்கது
.....நிலைப்பது.. இல்லை!
பணம்பணம் பணமென
.....பதறிடும் தொல்லை
கணம்கணம் கணங்களைக்
....கடப்பவர்க் கில்லை
சுணங்கிட வைக்கிறச்
.....சூழலின் தொல்லை
குணம்குறை கடந்தவர்
.....குடிகளில் இல்லை!

No comments: