தற்பெருமை பாடித்
.......ததிகிடத்தோம் போடுவதைக்
கற்றவர்கள் வாழ்த்துவதா
.......கண்ணியம்?- உற்றுணர்ந்தே
தட்டிக் கொடுப்பதற்குத்
.......தட்டிக் கொடுத்துவிட்டுச்
சுட்டும் பிழையிருந்தால்
.......சுட்டு!
நான்சொன்னால் கேட்பரா
....நல்லதே ஆனாலும்
வான்புகழ் வள்ளுவனின்
...வாக்கொன்றே- சான்றாம்
பணியுமாம் என்றும்
.......பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை
....வியந்து!செ. இராசா
No comments:
Post a Comment