(ஒரே படம்தான் வெவ்வேறு காலகட்டங்களில்
இந்தக் கவிதைகளைப் பிரசவித்துள்ளது)
**************
தொப்புள் கொடியிலே தூளிகட்டி
தொங்கியே வாழ்ந்த காலத்தைப்போல்
தோரணக் கொடியிலே காகிதமாய்
தொங்கிட வைத்தல் சரிதானோ?!!
(டேய் அப்பா... இறக்கிவிடுறா.... முள்ளு குத்துது)
23.12.2018
எப்பப்பா ஏற்றினாய்
....எப்பநீ சொல்லப்பா
அப்பப்பா அப்பப்பா
......அப்பாநீ- தப்பப்பா
முள்ளுப்பா முள்ளுப்பா
......முட்டுதே பாரப்பா
தள்ளுப்பா வேணாம்பா
.......தப்பு!
03.08.2019
பழக்கத்துக் கோசரம்
......பார்க்குறேன் இல்லை
பழத்துலயா ஏத்துற
......பாடு- கிழபோல்டு
கீழ இறங்குனேன்
......கீச்சிறுவேன் பார்த்துக்க
வீழநான் மாட்டேன்டா
.......வெல்ரு!
23.12.2022
வாமச்சி வான்னா
......வரனும்பா இல்லைன்னா
நாமயென்ன செஞ்சாலும்
.......நைநைம்பான்- பூமருங்க
எல்லோரும் இப்படித்தான்
.......ஏத்திநம்ம குந்தவச்சு
நல்லா இளிப்பாய்ங்க
.......வா
23.12.2024
No comments:
Post a Comment