21/12/2024

உலக தியான தினம்

 

தூங்காமல் தூங்கிச்
.....சுகம்காணும் வித்தையை
பாங்காய்ப் பழகிப்
.....பயனடைவீர்- தீங்கின்றி
இக்கலையைக் கற்றோர்
......இளமையாய்த் தோன்றுவதே
அக்கலைக்குச் சான்றாகும்
......ஆம்!

நல்ல அலைச்சுழலில்
....நாம்விடும் எண்ணத்தால்
நல்லவை யாவும்
.....நடந்தேறும்- இல்லையேல்
அல்லல் படுத்தும்
......அலைச்சுழலாய்ச் சூழ்ந்துபல
தொல்லைகள் நீளும்
..... தொடர்ந்து!

தவமாய்த் தவமிருந்தும்
.....தப்புகள் செய்வோர்
அவமென எண்ணி
....அதன்பின்- தவறாமல்
செய்யும் தவத்தைச்
....சிறப்பாகச் செய்துவர
பொய்மை விலகும்
....புரிந்து!

✍️செ. இராசா


No comments: