வருவதில் கழிவது செலவு!
...வரவால் சிரிப்பதும்
...செலவால் அழுவதும்
புரிந்தும் புரியா நிகழ்வாகும்!
கடனுற வாழ்வது இழுக்கு- நம்
கடமையைப் புரிவது சிறப்பு!
....கடனாய்ச் சூழ்வதும்
....கடமையை மறப்பதும்
இருந்தும் இல்லாக் கணக்காகும்!
வாழ்க்கையொரு வாழும்கலை
அறிந்தோர் வாழ்வே வாழ்வாகும்
கணம்கணம்நீ வாழ்ந்துவிட்டால்
கவிதை போன்றே இனிதாகும்.
கணம்கணம்நீ வாழ்ந்துவிட்டால்
கவிதை போன்றே இனிதாகும்.
No comments:
Post a Comment