ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
வான்படைத்த நாயகத்தை
வந்துவந்து பார்க்கிறேன்!
நான்பிறந்த காரணத்தை
நான்தெரிந்து கொள்ளவே..
தேன்படைத்த நாயகத்தைத்
தேடிவந்து பார்க்கிறேன்
தேன்கொடுத்த ஈக்களெல்லாம்
சேர்வதெங்கே கேட்கவே..
மான்படைத்த நாயகத்தை
மண்டியிட்டுக் கேட்கிறேன்
வேங்கையெல்லாம் வேட்டையாடும்
தேவைபற்றி வேண்டவே...
ஊண்கொடுத்த நாயகத்தை
ஒன்றுமட்டும் கேட்கிறேன்
சாண்வயிற்றின் தீப்பசிக்குத்
தேடலென்னுள் நீங்கேவே...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய

No comments:
Post a Comment