புதுக்கவிதை
இணையத்தில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுத்துள்ளேன்.
24/12/2024
ஒன்றுமே செய்யாமல் ஓரமாய் ஒதுங்கவா
ஒன்றுமே செய்யாமல் ஓரமாய் ஒதுங்கவா
உன்மகனை உலவ விட்டாய்?
என்றுமே வெல்லாமல் ஏக்கமாய்த் திரியவா
இப்பிறவி எடுக்க வைத்தாய்?
நன்றியே இல்லாதோர் நஞ்சினைப் பகிரவா
நண்பரெனப் பழக விதித்தாய்?
தன்மையே இல்லாதோர் தன்வினை புரியவா
தண்டனைபோல் எமையும் படைத்தாய்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment