24/12/2024

ஒன்றுமே செய்யாமல் ஓரமாய் ஒதுங்கவா

 

ஒன்றுமே செய்யாமல் ஓரமாய் ஒதுங்கவா
உன்மகனை உலவ விட்டாய்?
என்றுமே வெல்லாமல் ஏக்கமாய்த் திரியவா
இப்பிறவி எடுக்க வைத்தாய்?
நன்றியே இல்லாதோர் நஞ்சினைப் பகிரவா
நண்பரெனப் பழக விதித்தாய்?
தன்மையே இல்லாதோர் தன்வினை புரியவா
தண்டனைபோல் எமையும் படைத்தாய்?

No comments: