வழிவிடு கருப்புசாமி க்காக ஒரு பாடல்
பல்லவி
எத்தனையோ சாமி இருக்குது.....ஏ..
எங்கசாமி கருப்பனைப்போல்
குலசாமி எங்கே இருக்குது...
தகதகன்னு ஆடி வருகுது...ஏ.
வழிவிடும் கருப்புசாமி
தந்தத்தனத்தோம் பாடி வருகுது...
இந்தா வாறான் கருப்பு சாமி
அந்த வாறான் கருப்பு சாமி
எல்லோரும் வாழவழி காட்ட வாறான் கருப்புசாமி
நல்லோரும் வாழனுன்னு தேடி வாறான் கருப்புசாமி....
நம்ம குலம் காக்கனுன்னு
நம்ம குலம் காக்கனுன்னு
நாடி வாறான் கருப்புசாமி
உண்மை வெல்ல வேணுமுன்னு
ஓடி வாறான் கருப்புசாமி
வாடா....கருப்பா வாடா
வாடா....கருப்பா வாடாl
சரணம் 1
பந்தளத்து ராசனுக்குப்
பதினெட்டாம்படி கருப்பன்..
ஐயனாரு அத்தனைக்கும்
அன்பா..வழி விடுங்கருப்பன்
பாட்டன் பூட்டன் ஓட்டன்வழி
பரன்பரைக்கே மூத்தவனே
காட்ட நாட்ட வீட்டயென்று
காத்துவரும் முதல் அரணே..
வட்ட வட்ட பொட்டு வச்சு வடிவழகா இருப்பவனே..
முட்ட முழி கண்ண வச்சு நகர்வலமா
வருபவனே..
இந்தா வாறான் கருப்பு சாமி
அந்த வாறான் கருப்பு சாமி
எல்லோரும் வாழவழி காட்ட வாறான் கருப்புசாமி
நல்லோரும் வாழனுன்னு தேடி வாறான் கருப்புசாமி....
வாடா....கருப்பா வாடா
வாடா....கருப்பா வாடா
சரணம் 2
எல்லையில நிப்பவந்தான்
எங்ககுல கருப்புசாமி
தொல்லைகள தொலைப்பவன்தான்
எங்ககுல கருப்புசாமி
கச்சைமேல கச்சைகட்டி
ஆடிவாறான் கருப்புசாமி
சாட்டையத்தான் சுழட்டிக்கிட்டே
ஓடிவாறான் கருப்புசாமி
கொட்டு கொட்டி கொம்பூதி குலவையிட்டு கூப்பிடுவோம்
எட்டுக் கட்டில் பாட்டுக்கட்டி
இங்கேவரக் கூப்பிடுவோம்
இந்தா வாறான் கருப்பு சாமி
அந்த வாறான் கருப்பு சாமி
எல்லோரும் வாழவழி காட்ட வாறான் கருப்புசாமி
நல்லோரும் வாழனுன்னு தேடி வாறான் கருப்புசாமி....
வாடா....கருப்பா வாடா
வாடா....கருப்பா வாடா
செ. இராசா
பல்லவி
எத்தனையோ சாமி இருக்குது.....ஏ..
எங்கசாமி கருப்பனைப்போல்
குலசாமி எங்கே இருக்குது...
தகதகன்னு ஆடி வருகுது...ஏ.
வழிவிடும் கருப்புசாமி
தந்தத்தனத்தோம் பாடி வருகுது...
இந்தா வாறான் கருப்பு சாமி
அந்த வாறான் கருப்பு சாமி
எல்லோரும் வாழவழி காட்ட வாறான் கருப்புசாமி
நல்லோரும் வாழனுன்னு தேடி வாறான் கருப்புசாமி....
நம்ம குலம் காக்கனுன்னு
நம்ம குலம் காக்கனுன்னு
நாடி வாறான் கருப்புசாமி
உண்மை வெல்ல வேணுமுன்னு
ஓடி வாறான் கருப்புசாமி
வாடா....கருப்பா வாடா
வாடா....கருப்பா வாடாl
சரணம் 1
பந்தளத்து ராசனுக்குப்
பதினெட்டாம்படி கருப்பன்..
ஐயனாரு அத்தனைக்கும்
அன்பா..வழி விடுங்கருப்பன்
பாட்டன் பூட்டன் ஓட்டன்வழி
பரன்பரைக்கே மூத்தவனே
காட்ட நாட்ட வீட்டயென்று
காத்துவரும் முதல் அரணே..
வட்ட வட்ட பொட்டு வச்சு வடிவழகா இருப்பவனே..
முட்ட முழி கண்ண வச்சு நகர்வலமா
வருபவனே..
இந்தா வாறான் கருப்பு சாமி
அந்த வாறான் கருப்பு சாமி
எல்லோரும் வாழவழி காட்ட வாறான் கருப்புசாமி
நல்லோரும் வாழனுன்னு தேடி வாறான் கருப்புசாமி....
வாடா....கருப்பா வாடா
வாடா....கருப்பா வாடா
சரணம் 2
எல்லையில நிப்பவந்தான்
எங்ககுல கருப்புசாமி
தொல்லைகள தொலைப்பவன்தான்
எங்ககுல கருப்புசாமி
கச்சைமேல கச்சைகட்டி
ஆடிவாறான் கருப்புசாமி
சாட்டையத்தான் சுழட்டிக்கிட்டே
ஓடிவாறான் கருப்புசாமி
கொட்டு கொட்டி கொம்பூதி குலவையிட்டு கூப்பிடுவோம்
எட்டுக் கட்டில் பாட்டுக்கட்டி
இங்கேவரக் கூப்பிடுவோம்
இந்தா வாறான் கருப்பு சாமி
அந்த வாறான் கருப்பு சாமி
எல்லோரும் வாழவழி காட்ட வாறான் கருப்புசாமி
நல்லோரும் வாழனுன்னு தேடி வாறான் கருப்புசாமி....
வாடா....கருப்பா வாடா
வாடா....கருப்பா வாடா

No comments:
Post a Comment