ஒவ்வொரு கல்லுக்கும்
ஓர் அதிர்வலை உண்டு
அது எறியும் கற்களின்
அளவைப் பொறுத்ததுமட்டுமல்ல
வேகத்தைப் பொறுத்ததும்கூட..
ஆம்....
வேகம் அதிகரிக்க அதிகரிக்க
அழுத்தமும் அதிகரிக்கும்
அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க
அதிர்வலைகளும் அதிகரிக்கும்...
குளக்கரையில் அமர்ந்துகொண்டு
கொக்கரித்தால் மட்டும் போதாது
கல்லெறியும் கலையை
முறையாகக் கற்க வேண்டும்...
குதித்துக் குதித்து போக
ஓரவாக்கில் எறிய வேண்டும்
அதேபோல் கல்லும்
சப்படையாக இருக்கவேண்டும்..
நடுவில் பார்த்து எரிந்தால்
வட்ட எல்லையின் அளவு
சற்றேப் பெரிதாய் இருக்கும்
இப்படி
கல்லறியும் கலையை
முறையாகக் கற்றறியுங்கள்...
முக்கியமாக குளங்களில்
மட்டும் எறியுங்கள்
அதைவிடுத்து
உங்களின் இருப்பைக் காட்ட
எங்கள்மேல் எறியாதீர்கள்; ஆம்
எங்கள்மேல் எறியாதீர்-கல்
இல்லை
எறிவதாய் இருந்தால்
சொல்லிவிட்டு எறியுங்கள்...
நாங்களும் தயாராகிக் கொள்கிறோம்
எறிபவரை அடையாளம்காண...
காரணம்
எதிரிகள்கூட
எதிரிருந்துதான் எறிகிறார்கள்..
ஆனால்.....
சில துரோகிகள்தான்...
திடீரென்று எறிகிறார்கள்..
அட..
இதற்காகவெல்லாம்
குளம் கலங்குமா என்ன?
எறியுங்கள்..
எறியுங்கள்...
பாவம்...
உங்களால் அதுதானே முடியும்...