வீட்டில் இருந்தவனோ
....வீட்டைத் துறந்தகணம்
வீட்டோடு விட்டான்
....விடையன்றோ- ஓட்டமாய்
ஓட்டிக் களித்தவனோ
பூட்டினான் நட்பைப்
....புதைத்து!
கேட்பாரும் யாருமில்லை
...கேட்டாலும் நீதியில்லை
தீட்டென்றே எண்ணுபவர்
...தேவையில்லை- வாட்டமில்லை
உண்மைக்குக் காலமில்லை
...உள்ளார்ந்த பாசமில்லை
கண்ணிருந்தும் பார்வையில்லை
...காண்!
No comments:
Post a Comment