வாய்மையில்லை நேர்மையில்லை
...வாய்கிழியப் பேசுவான்!
தூய்மையில்லை உண்மையில்லை
... சூதுகவ்வத் தேடுவான்!
ஆய்வதில்லை ஆர்வமில்லை
ஓய்வதில்லை சோர்வதில்லை
....ஊறுசெய்யக் கூடுவான்!
திராவிடத்தின் நாடுயென்று
...திட்டமொன்று தீட்டியும்
வராதுயென்று கண்டபின்னே
...நம்மைநம்பச் சொல்கிறான்!
நிராசையுற்ற கட்சியெல்லாம்
...நேர்த்தியாகச் செய்திடும்
திராவகத்தைத் தீர்த்தமென்றே
...தீர்வுசெய்ய வேண்டுமோ?!
No comments:
Post a Comment