கட்சிகள் தோன்றுவது காலத்தின் கட்டாயம்
நட்டமென்ன சொல்வீர் நமக்கு?
(1)
கொள்கைத் தலைவரெனக் கோடிட்டு காட்டி:அதில்
தள்ளுவதைத் தள்ளியது சால்பு!
(2)
கூத்தாடி என்றால் குறையென்ன கண்டீர்கள்
மூத்தோர்கள் இல்லையா முன்பு?!
(3)
வருவதாய்ச் சொல்லி வடைசுடுவோர் முன்னே
வருவதும் நல்வரவே வா!
(4)
அரசியல் என்பதென்ன அப்பனின் சொத்தா?!
வரவரத்தான் மாற்றம் வரும்!
(5)
நாளைய தீர்ப்பெழுத நம்பிக்கை கொண்டவரின்
ஊழை எவரறிவார் ஓய்!
(6)
அதைஇதைச் சொல்லித்தான் ஆகின்றார் பின்னே
எதையும் புரிவதில்லை ஏன்?
(7)
உதயநிதி யெல்லாம் உரையாற்றும் காலம்
புதியவிதி செய்வீர் புரிந்து!
(8)
நீட்டி முழக்காமல் நேரடியாய் சொல்லிவிட்டார்
ஆட்சியில் பங்குண்டாம் அங்கு!
(9)
காசுபணம் செய்கின்ற காட்சியும் உள்ளதனால்
தூசில்லை வெற்றித் தொடர்!
(10)
No comments:
Post a Comment