எத்தனை சோதனை
....எத்தனை வேதனை
..........என்னதான் ஆச்சுதாயே?
எத்தனை ஆயினும்
.....ஏற்றுவேன் பாடலை
பித்தனைப் போலவே
....பிதற்றிடும் போக்கிலே
......பேரணை போடுதாயே!
வித்தகன் வெல்லவே
.... வெற்றிகள் சேரவே
.......வேரென மாறுதாயே!
கற்றது கொஞ்சமே
..கற்பனை விஞ்சுமே
.... கருணையைக் காட்டுதாயே!
அற்பனுக் கொருமுறை
... அதிசயம் நிகழுமே
...... அதிலெனைச் சேருதாயே!
சுற்றமும் மாறுதே
.... சூழலும் மாறுதே
........தொடருமோ மாயைதாயே!
மற்றவர் போற்றவே
.....நற்றமிழ் ஏற்றவே
........வையுமே எம்மைநீயே!
No comments:
Post a Comment