மெட்டுக்குப் பாட்டு
வரவுக் கேத்த செலவு இருந்தா
பிரச்சினை இருக்காது- அங்கே
பிரச்சினை இருக்காது!
ஒருவொருக் கொருவர் விட்டுக் கொடுத்தா
பிரிவுகள் தோன்றாது- உறவில்
பிரிவுகள் தோன்றாது!
துரும்பென வேணும் கிள்ளிக் கொடுத்தா
வருவது குறையாது- அதிலே
வருவது குறையாது!
இருவினை புரியும் நாடகம் புரிஞ்சா
வரும்வினை வலிக்காது- பெரிதாய்
வரும்வினை வலிக்காது!
.................
(வேறு)
தெய்வம் தங்கும் வீடு
எங்கே இருக்கு?
தெய்வம் தங்கும் வீடு
அன்பில் இருக்கு
இந்த வாழ்வென்ன?
கொண்ட ஊழென்ன?
பாரு கண்ணே...
தேடும் பொருளென்ன
நீ தந்த வினை என்ன?
No comments:
Post a Comment