நண்பன் என்ன எதிரி என்ன
...நகரும் வாழ்வில் யாரடா?!
நண்பன் மாறி எதிரி யாகும்
...நடப்பைக் கூர்ந்து நோக்கடா!
உண்மை நட்பு தோற்ப தில்லை
உண்மை கூட வெல்வ தெங்கே
... உரக்க நீயும் கேளடா?!
போக விட்டுப் புறணி பேசி
....புகையும் மாந்தர் யாரடா?
சாக விட்டுப் பெருமை பேசும்
... சகத்தை எண்ணிப் பாரடா...
தேகங் கெட்டு தெருவில் வந்து
... திரியும் கூட்டம் யாரடா?
போகம் தேடி போதை ஏற்றி
.....புரளும் மாந்தர் தானடா...
No comments:
Post a Comment