17/09/2024

தான்தான் தானென்று


தான்தான் தானென்று
....தற்பெருமை பேசாமல்
...... தன்நிலையை நோக்குவீரோ?!
நான்தான் கோனென்றே
....நான்போல் யாரென்றே
.......நான்பெருமை பாடுவீரோ??
ஏன்தான் வாழ்வென்றே
.... எப்போதும் நெஞ்சுக்குள்
.......எண்ணியதில் மூழ்குவீரோ?
தேன்தான் இஃதென்றே
.....தேள்சிந்தும் நஞ்சினையும்
........ தேவையென கொள்ளுவீரோ?!

No comments: