பொல்லா வினைதீர்க்கும்
......புண்ணியனே! என்றைக்கும்
இல்லார் உடனிருக்கும்
.....ஏகனே- வல்லோனே!
நல்லார் நலம்காக்கும்
சொல்லாய் வருவாய்
.....துணை!
(வேறு)
ஆனை முகத்தழகு பிள்ளையாரே
உங்களாசிய வேண்டுகிறோம் பிள்ளையாரே...
அரச மரத்து-அடிப் பிள்ளையாரே
எங்களாசைய தீர்க்கவேணும் பிள்ளையாரே...
ஓடி உழைக்கின்றோம் பிள்ளையாரே
ஒருவெற்றிதரச் செய்வீரோ பிள்ளையாரே..
தேடித் திரிகின்றோம் பிள்ளையாரே
பெரும்சக்தியென வாரீரோ பிள்ளையாரே
காலமும் நேரமும் வந்துட்டாலே- நல்ல
ஞானமும் யோகமும் வந்திடாதோ?!
ஆர்வமும் வேகமும் வந்துட்டாலே- தெய்வ
ஆசியும் மோட்சமும் வந்திடாதோ?!
No comments:
Post a Comment