04/09/2024

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு


கற்றவர் சிறக்க வேண்டின்
...கற்பனைப் பெருக வேண்டின்
நற்புகழ் கிடைக்க வேண்டின்
...நல்லவை நடக்க வேண்டின்
சொற்பொருள் பலிக்க வேண்டின்
...சுயவொளி மிளிர வேண்டின்
முற்றிலும் தந்து பாரீர்
...முதல்வனே ஆட்டு விப்பான்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு இப்பாடல் சமர்ப்பணம்

 

No comments: