20/09/2024

குடியைக் கெடுக்கும் குடியே

 


தொகையறா
தமிழினமே ஒன்றுபடு
எழுச்சித் தமிழர் அழைக்கின்றார்
மது ஒழிப்பு மாநாடு
மக்கள் சேவகர் அழைக்கின்றார்..

எத்தனையோ தாய்மார்கள்
ஏங்கியழும் துயர் கண்டு
திசைமாறும் தலைமுறையைத்
திருப்பிவட மனம் கொண்டு
திருமா அண்ணன் அழைக்கின்றார்...

பல்லவி
குடியைக் கெடுக்கும் குடியே- உன்னை
ஒழிப்போம் தலைவர் வழியே
மதுவை மறக்கும் முடிவை- குரல்
கொடுப்போம் உலகம் அதிர

போராட நெஞ்சில் துணிவிருக்கு- எங்க
திருமா அண்ணன் துணையிருக்கு!
*வேரோட சாய்க்கும் வலுவிருக்கு*- *நம்ம*
*சிறுத்தை போல படையிருக்கு*

விடுவிடுடா குடிவிடுடா
முடிவெடுடா விடைகொடுடா
புதுவழியில் நடநடடா
புயலனவே புறப்படுடா
தனிவழிடா அறவழிடா
தமிழினமே எழுந்திடடா

சரணம்-1
நடக்கும் நடக்கும் நல்லதே நடக்கும்
எழுச்சித் தமிழனால் அது நடக்கும்
அடைக்கும் அடைக்கும் மதுக்கடை அடைக்கும்
போராட்டம் நிற்காது அது வரைக்கும்
கட்சிபேதம் இதில் ஒன்னுமில்லை
வேறநோக்கம் இங்க ஏதுமில்லை
வீட்டுக்கொரு ஆளுயிங்கே குடிக்கவேணுமா- இல்லை
நாட்டுக்கது கேடுயென்று தடுக்கவேணுமா

விடுவிடுடா குடிவிடுடா
முடிவெடுடா விடைகொடுடா
புதுவழியில் நடநடடா
புயலனவே புறப்படுடா
தனிவழிடா அறவழிடா
தமிழினமே எழுந்திடடா

சரணம்-2
தடுப்போம் தடுப்போம் மரணத்தைத் தடுப்போம்
குடியால வரும்நோய உடன் தடுப்போம்
கொடுப்போம் கொடுப்போம் ஒன்றாகக் கொடுப்போம்
இனியேனும் எதிராகக் குரல் கொடுப்போம்!.
தேர்தல்பற்றி இதில் எண்ணவில்லை
போதைவெறி அது நல்லதில்லை
குடிக்கிறத தவறுயென்று தடுக்கவேண்டுமா?- இல்லை
குடிமகனே குடியென்று கொடுக்கவேண்டுமா?

விடுவிடுடா குடிவிடுடா
முடிவெடுடா விடைகொடுடா
புதுவழியில் நடநடடா
புயலனவே புறப்படுடா
தனிவழிடா அறவழிடா
தமிழினமே எழுந்திடடா


No comments: