பத்துமலை ஆள்கின்ற
.....பைந்தமிழ் வேலவனே!
முத்துமலை வந்த
.....முருகனே!- சித்தனே!
முத்தமிழ்க் காவலனே!
வித்தகன் ஆக்காய்
.....விரைந்து!
(1)
நீரில்லா ஊரினிலே
...நீர்பெருகச் செய்தவனே!
நீரின்றி உண்டோ
...நிலமிங்கே!- பாரிங்கே!
வானுயர நிற்பவனே
.....வான்புகழ் கொண்டவனே!
நானுயரச் செய்வாயோ
....வந்து!
(2)
எழுகோண வீட்டில்
.....எழுந்தருளி யுள்ளோன்!
எழுபிறவித் தீதை
.....எரிப்போன்!- முழுமுதலோன்!
ஆறுபடை அத்தனையும்
.....ஐக்கியமாய் ஆனவன்!
மாறுதலைத் தந்திடுவான்
......நம்பு!
(3)
No comments:
Post a Comment