உசுர கொடுக்கும் உறவ- நாம்
மதிப்போம் உசுருக்கும் மேல
பழச மறக்கும் உறவ -நாம்
மறப்போம் பிசிறுக்கும் கீழ..
மாறாத நட்பின் துணையிருக்கு- அதுக்கு
மாறாக என்ன உறவிருக்கு?
தீராத காயம் பலயிருக்கு- கானல்
நீரான சேர்க்கை நமக்கெதுக்கு?
விடுவிடுடா முடிவெடுடா
புயலனவே புறப்படுடா
விடைகொடுடா விரைந்தெழுடுடா
புதுவழியே புகுந்திடடா
முடிந்ததடா கழிந்ததடா
வினையெனவே நினைந்திடடா..
நடக்கும் நடக்கும் நல்லதே நடக்கும்
நினைக்கும் படியே அது நடக்கும்
கிடைக்கும் கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
முயற்சி தொடர்ந்தா அது கிடைக்கும்
சொந்தம் பந்தம் ஒன்னும் செய்யவில்லை
இங்கே மட்டும் இன்னும்
விடியவில்லை
பஞ்சப் பாட்டு பாடிக்கிட்டே
திரிய வேணுமா? இல்லை
நெஞ்சத் தூக்கி
நிக்காமநீ ஓட வேணுமா?!
விடுவிடுடா முடிவெடுடா
புயலனவே புறப்படுடா
விடைகொடுடா விரைந்தெழுடுடா
புதுவழியே புகுந்திடடா
முடிந்ததடா கழிந்ததடா
வினையெனவே நினைந்திடடா..
No comments:
Post a Comment