தமிழாய் இனிதாய்த்
.....தனியாய் வருவாய்
அமிழ்தாய்ப் பொழிவாய் 
.....அருளாய்க்- குமிவாய் 
கலையாய் அழகாய் 
மலையாய் உயர்த்துவா
....யே!
முருகா குமரா 
...முதலாம் கிழவா
சருகா துளிரா 
....தனையார்ப்-புரிவார்?
தனியாய் அமர்வோர்
....தனிலே உறைவோர்
இனிதே அறிவார்
......இசைந்து!
கந்தா கடம்பா 
.....கதிர்வேலா கேளாயோ!
இந்தா எனநான்
......எதனையும்- தந்தால்
அனைத்தும் உனதே! 
.....அதனால் இறைவா
எனைத்"தான்" தருவேன் 
.....இனி!
(மனைவியின் விருப்பத்திற்கிணங்க எழுதிய வெண்பாக்கள்)

No comments:
Post a Comment