17/04/2026

கானம்

 


பலகாலமாய் பலநேரமாய்
‌......படைப்போங்கிட நாளும்
விலகாமலே ஒருநோக்கிலே
......உருவாக்கிய கானம்!
அழகாகவே தெளிவாகவே
......புதிதாகவே யாவும்
இழப்பாயினும் வருந்தாமலே
......கொடுத்தேனதைப் பாரும்!
இறையோனவன் தருவானென
......நினைந்தேதரும் போதும்
முறையாயொரு பெரிதாயொரு
......பலனேயிலை ஏதும்!
குறைநீங்கிட நிறையோங்கிட
......தருவானெனில் லாபம்
முறையாகவே விரைவாகவே
......தருவேன்பல கானம்!
✍️செ. இராசா

No comments: