கிணற்றுத் தவளை போலிருந்து
...கேட்கும் உந்தன் கேள்வியை
உணர்வு நோக்கில் மேலெழும்பி
...உற்று நோக்கிக் கேளுமே?!
பணத்தை மட்டும் எண்ணியெண்ணி
... பார்க்கும் உந்தன் பார்வையை
சணத்தில் நீங்கும் உயிரையெண்ணி
...தன்னுள் நோக்கிப் பாருமே!
பிண்ட முள்ளே ஓடிபின்னே
....பிரிந்து போவ தெங்ஙனே?
அண்ட மெங்கும் தேடினாலும்
....அறிந்து கொள்வ தெங்ஙனே?!
பண்ட மாற்றுச் சந்தைபோல
....பதிவை மாற்றும் விந்தையை
விண்ணை உற்று நோக்கியுண்மை
....விளங்க வைப்பீர் சிந்தையை!
No comments:
Post a Comment