அரசியல் திருவிழாவிற்காய்
ஆயிரம் தோரணங்கள்!
முதல் மரியாதை வேண்டி
முரண்பாட்டுக் கூட்டணிகள்!
கரகாட்டம் குத்தாட்டமாய்
உற்சாகத் தொண்டர்கள்!
அள்ளிவிடத் தயாராகும்
குளிர்பான தானங்கள்!
இதோ சூடுபிடிக்கிறது
இன்னுமோர் சூது களம்...
பகடை அவர்கள் கையில்
ஆனால்...பலி?!.
மீண்டுமோர் துகிலுரிப்பு நடக்க
இப்போதே தயாராகிறார்கள்....
பாவம் மக்கள்...
No comments:
Post a Comment