சினம்கொண்ட வேந்தையாய் சீறிட வேண்டாம்
மனம்கொண்ட மாந்தராய் மாறிட வா!
குணம்கெட்ட மந்தியாய்க் குதித்திட வேண்டாம்!
மணம்கொண்ட மல்லியாய் மாறிட வா!
களம்விட்ட கோழையாய் கைவிட வேண்டாம்!
களம்வென்ற வீரனாய் காமுற வா!
உளம்நொந்த மங்கையாய் உலவிட வேண்டாம்!
வளம்கொண்ட வாழ்க்கையை வாழ்ந்திட வா!

No comments:
Post a Comment