கொத்தமல்லியும் போடாம
பிரியாணி சாத்தியமான்னு
பிரியமானவளிடம் கேட்டேன்....
அட..
உங்களால் முடியும்
நீங்க கிண்டி இறக்குங்கன்னா...
...
சத்தியமா சொல்றேங்க
ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும்
அவுங்களும் இருக்காங்கங்க..
ஆங்...
(ஒரே படம்தான் வெவ்வேறு காலகட்டங்களில்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
தூங்காமல் தூங்கிச்
எழுதாத தாளில் எழுதலாம்...
எழுதிய தாளில் எழுத முடியாது; அஃதே
கரை வீணையை மீட்டி
அலை விரல்கள் எழுப்பும்
அற்புத சிம்பொனியில்
அணுஅணுவாய்க் கரைகின்ற
அந்த அனுபோகம் வேண்டுமா?
இதோ இந்தக்
கடலோரக் கவிதையை வாசியுங்கள்!
அடைமொழியின் உள்ளே அடைபட்டோம் என்றால்
தடைப்பட்டுப் போகும் தமிழ்.
(1)
தமிழை உயர்த்துவதாய் தம்பட்டம் போட்டுத்
தமிழால் உயர்கின்றார் தான்.
(2)
தான்தான் உயர்வென்று தற்பெருமை பேசினால்
சான்றோர்முன் தாழும் தரம்.
(3)
தரமில்லாச் செய்கை தரம்தாழ்த்தும் என்றும்
சிரமுயரச் செய்தால் சிறப்பு.
(4)
சிறந்தவராய் மாற சிலகாலம் ஆகும்
திறமை குறையாமல் தேடு.
(5)
தேடுகின்ற அத்தனையும் சேர்வதில்லை என்றாலும்
ஓடுகின்ற காலத்தில் ஓடு.
(6)
ஓடுகின்ற காலத்தில் ஓயாமல் ஓய்ந்துவிட்டால்
கேடுறும் வாழ்க்கைதான் தீர்வு .
(7)
தீர்வில் தெளிவோடு தேடுகின்ற ஓட்டத்தால்
யார்க்கும் எளிதாம் இலக்கு.
(8)
இலக்கின்றிப் போனால் எளிதும் அரிதாம்
இலக்கை முதலில் எழுது!
(9)
எழுத்தென்னும் ஆயுதத்தால் எண்ணத்தைக் கீறி
அழுத்தமுற வெற்றி அடை!
(10)செ. இராசா
பார்க்கப் பழகப்
.....பசுபோல் இருந்தாலும்
சேர்க்கை அழுக்கென்றால்
.....சேர்வதில்லை- தீர்க்கமுடன்
தன்னைப் பெரிதென்றே
......தானெங்கும் காட்டாத
இன்பக் கலிலே
......இவர்!
தேடல் ஒருபக்கம்
.......தேவை மறுபக்கம்
பாடல் பயணமெனப்
........பாடுபட்டே- ஓடுகின்ற
இன்பக் கலிலென்னும்
.......இன்னிசை வேந்தருக்கு
நண்பனாய் நான்தரும்
.......வாழ்த்து!செ. இராசா