#இடியாப்போம் இடியாப்போம்
பிடிபாப்போம் பிடிபாப்போம்(2)
இடியாப்போம் இடியாப்போம்
முடிஞ்சாநீ பிடிபாப்போம்...
இடியாப்போம் இடியாப்போம்
பிடிக்காம விடமாட்டோம்...
அப்படியா..
வாம்மா மின்னல்...
இடிமின்னலப்போல் ஏன்டா நீயும் ஓடுற
விடிகாலையில கண்ணாமூச்சி ஆடுற
இடியாப்பமுன்னு சோக்காத்தானே கூவுற
சரிபார்ப்பமுன்னு வந்தா சாலா தாவுற...
இடியாப்போம் இடியாப்போம்
பிடிபாப்போம் பிடிபாப்போம்(2)
சந்துல பொந்துல புகுந்து வாறான்
வந்ததக் காணலைப் பறந்து போறான்
எப்படி இப்படி கடந்து போனால்
எத்தனை விக்கிம் எதுக்கு வீணா?
கண்ணுல காட்டுற எண்ண மில்லைன்னா
வண்டில வச்சிட்டு வாறீயே எதுக்கு?
ஒன்னையும் விக்கிற ஆசை இல்லைன்னா
ஒன்டியாக் கூவுற ஓலம் எதுக்கு?!
பல்லில்லாத பெருசுகூட
பாலவூத்தத் துடிக்கும்
பொக்க வாயில் பாலவிட்டுப்
பாயாசமாக் குடிக்கும்
பச்சப்பள்ள அத்தனைக்கும்
இடியாப்பான்னா உசுறு
அச்சாநஹி ஐயம்சாரி
மத்ததெல்லாம்....நவுறு
கடலைக்கறி குருமாகூட
சேர்த்தா நல்லா இருக்கும்- அது
கிடைக்கலைன்னா என்னா இப்போ
வெல்லம் போட்டா ருசிக்கும்!
ஆயில் இல்லாப் பண்டந்தானே
ஆயுளக் கூட்டிக் கொடுக்கும்- அட
வறுத்து பொரிச்சு திண்ணோமுனா
வயசுதானே குறையும்!
இடியாப்போம் இடியாப்போம்
பிடிபாப்போம் பிடிபாப்போம்(2)
இடிமின்னலப்போல் ஏன்டா நீயும் ஓடுற
விடிகாலையில கண்ணாமூச்சி ஆடுற
இடியாப்பமுன்னு சோக்காத்தானே கூவுற
சரிபார்ப்பமுன்னு வந்தா சாலா தாவுற...
இடியாப்போம் இடியாப்போம்
முடிஞ்சாநீ பிடிபாப்போம்...
இடியாப்போம் இடியாப்போம்
பிடிக்காம விடமாட்டோம்...செ. இராசா
No comments:
Post a Comment