02/06/2025

பெருங்கருணை மெல்லிசையே

 

பெருங்கருணை மெல்லிசையே
....பெய்வாய் இன்னிசையே!
தரும்இறைக்குச் சம்மதமோ
.....தனியாய் நின்றனையே!
அரும்பொருளை வைத்தெங்கும்
.....அளித்தாய் வைத்தியமே!
வரும்படைப்பு சொல்கிறதே
......வார்த்தோன் தனித்துவமே!
நுணுக்கரிய நுண்ணுணர்வே
.....நுண்மாண் நுழைபுலனே!
அணுக்குரிய அற்புதமே
.....ஆரா அமுதே!
கணமெழும்பும் முன்னாலே
.....கவியென எழுவோனே!
சணப்பொழுதும் ஓயாமல்
......பண்களில் மகிழ்வோனே‌‌!
இசைவள்ளல் ஆனவனே
....யாமளிக்க யாதுண்டோ?
திசையாவும் கடந்தவனே
.....தேனிசைக்கு..ஈடுண்டோ...
அள்ளியள்ளித் தந்தவனே
.....யாமளிக்க யாதுண்டோ?
எள்ளளவேப் பாடியுள்ளோம்'
.....ஏற்பீரோ தேசிகரே...
............ஞான தேசிகரே..
வள்ளலுனை வாழ்த்திடவே
...முத்தமிழைக் கோர்த்துள்ளோம்!
துள்ளலிசை சூழ்ந்திடவே
..தோல்தட்டி வார்த்துள்ளோம்!
மெல்லிசையின் நாயகனே
...வேறென்ன செய்திடுவோம்?!
நல்லிசைபோல் வாழ்வீரே
.....நன்று!
✍️செ. இராசா

No comments: