நடந்ததை நினைச்சா
என்னத்தை சொல்ல...
எல்லாம் அவரவர் நேரமுங்க...(2)
இது எதனால் நடந்தது என்று
இங்கே எவருக்கும் புரியவில்லை
இறந்துபோன அத்தனைபேரும்
உண்மையிலே பாவங்க...
கருகிப்போன அத்தனை உசுரும்
கண்ணுமுன்னே வருதுங்க...
நடந்ததை நினைச்சா
என்னத்தை சொல்ல...
எல்லாம் அவரவர் நேரமுங்க...
பறந்திடும் முன்னே பார்க்கலையா?!
பழுதென முன்னேத் தெரியலையா?!
யாரைக் கேள்வி கேட்பது?
ஐயோ கடவுளே...
மனிதப் பிழைக்கிது தண்டனையா?
மனிதனாய்ப் பிழைப்பதே தண்டனையா?
ஒன்னும் புரிய வில்லையே... எல்லாம் தொல்லையே..
அட...வாழ் வென்பதே மாயை
இதை ஆழ் மனதிலே நீவை
அட...வாழ் வென்பதே மாயை
இதை ஆழ் மனதிலே நீவை
நடந்ததை நினைச்சா
என்னத்தை சொல்ல...
எல்லாம் அவரவர் நேரமுங்க...(2)
ஒரு நபர் குதித்து பிழைத்துவிட்டார்
பல பேர் உயிர்களைக் கொடுத்துவிட்டார்
விதியின் ஆட்டம் என்பதா
விளங்கவில்லையே
மருத்துவப் பிள்ளைகள் பாவமுங்க....
அவர்களின் நிலைமை கொடுமையுங்க..
என்ன சொல்லி என்னங்க எல்லாம் நேரங்க....
ஒரு நீர்க்குமிழிபோல் வாழ்க்கை
இதை ஆழ் மனதிலே நீவை (2)
நடந்ததை நினைச்சா
என்னத்தை சொல்ல...
எல்லாம் அவரவர் நேரமுங்க...(2)

No comments:
Post a Comment