10/07/2024

வாரா வாரம்

 


வாரா வாரம் எப்பொழுதும்
....வருவோம் கடற்கரை மீன்பிடிக்க!
வாரா வாரம் என்பதெல்லாம்
....வந்ததே இல்லை என்பதுபோல்
வாரா மீன்கள் அத்தனையும்
....வருதே வருதே என்றுசொல்லி
தீரா ஆசையில் எப்பொழுதும்
....திரும்பி வருவோம் மீன்பிடித்தே!

பிடித்த மீன்களை வீடுவந்து
..பிரித்து விடுவோம் வகைவகையாய்
பிடித்த வகையில் ஓர்பங்கை
..பிரியமாய் சமைக்க மனம்வைத்தே
தடித்த மீனைக் கழுவுகையில்
..சடக்கென செதில்கை இறங்கியதே
முடிந்த வரையும் முயன்றாலும்
...வரவே இல்லை செதில்வெளியே!

என்ன ஆகும் எனநினைந்தே
...இருந்தே விட்டேன் சிலமாதம்!
இன்னல் கொஞ்சம் இருந்தாலும்
...இருந்தேன் அதுயென் பிடிவாதம்!
என்னதான் உள்ளே என்றறிய
...எடுத்தேன் முடிவை ஒருவழியாய்!
சின்ன செதில்தான் இருப்பதினால்
...திறப்பதா? விடுவதா? முடிவெனதே!

✍️செ. இராசா

No comments: