பிரபலத்தின் வாரிசானால் 
பிற-பலம் பல இருந்தும் 
அடையாளம் என்னவோ 
அண்ணாரின் வாரிசென்றே...
தன்பலம் காட்டி இங்கே 
தனித்துவமாய் நின்றாலும் 
விமர்சன நாக்குகளோ 
வீசுவது திராவகமே...
அனைத்தையும் துடைத்தெறிந்து 
அரிமா போல் நிற்பதற்கு 
எத்தனை வலிமை வேண்டும்?!
எழுதுகின்றேன் இக்கவியில்;
 
1953
முத்துவேல் #கருணாநிதிக்கும் 
#தயாளு_அம்மாளுக்கும்
மூன்றாம் மகனாக 
சென்னையில் அவதரித்தப் 
பிஞ்சுக் குழந்தைக்குப் 
பேர்வைத்தார் #ஸ்டாலினென்று...
கம்பன் வீட்டுக் கட்டுத்தறிபோல் 
கலைஞர் வீட்டு கன்றுக்குட்டியும் 
அணு அணுவாய் உள்வாங்கி 
அரசியலைக் கற்றதினால் 
அண்டம்போல் ஆனதென்று 
அறிந்தோர் சொல்கின்றார்? 
அறியாதோர் வியக்கின்றார்!
உற்றாரும் மற்றாரும்
ஓர் வீட்டில் இருந்தாலும் 
கற்றோராய்க் கற்றால்தான் 
பார் போற்றும் வாழ்வென்று 
அரசியல் அரிச்சுவட்டை 
ஆழமாய்க் கற்றதினால்
கோபால புரத்திலே
கோ-மகனாய் வாழாமல்
இளைஞர் கழகமென்று
இவர் செய்த அமைப்பாலே      
இந்நாளின் தலைமைக்கு 
அந்நாளில் வித்திட்டார்…!
கலைஞரின் மகனென்று 
கட்டிலில் தூங்காமல் 
முனைப்போடு முழங்கியதால் 
முடக்கிட எண்ணியோர் 
சிறைக்குள் பூட்டியதால் 
சிறப்புடன் எழுச்சியுற்றார்!
ஆயிரம் விளக்கிலே 
இருமுறை தோற்றாலும்  
அணையா விளக்காக 
அடுத்தடுத்து வெற்றிபெற்றார்!
பதினான்கு வயதுத்தொட்டு  
படிப்படியாய் வந்தாலும்
பொறாமைத் தீயாலே 
பொசுக்கிட நினைத்தோர்க்கு  
தலை நகர மேயராகி 
#தளபதியாய்க் காட்சி தந்தார்!
#சிங்காரச்_சென்னையென்ற 
சீர்மிகு திட்டத்தால் 
இந்திய கண்டமே 
விந்தையெனப் பேச வைத்தார்!
வளர்ச்சி பொறுக்காமல் 
வசவினை வீசியோர் 
வளர்ச்சி பொறுக்காமல் 
வசவினை வீசி ஓர் 
புதிய சட்டத்தால் 
பதவியைப் பறித்துவிட்டார்!
இருந்தும் துவளாமல் 
இறங்கிய வேகத்தால்
ஒவ்வொரு பதவியையும் 
ஒவ்வொரு படியாக்கி
எதிரிக் கொட்டத்தை 
இன்றைக்குப் பொடியாக்கி 
தனித்துவத் தலைவனாய்த்
தலை நிமிர்ந்து நிற்கின்றார்!
தலைவர் திரு #மு_க_ஸ்டாலின் அவர்கள்!
வாழ்க வளமுடன் ஐயா!
செ. இராசமாணிக்கம்
கத்தாரில் இருந்து...
#குறிப்பு: நான் திமுக-வைச் சேந்தவன் அல்ல. அனைவரிலும் உள்ள நல்ல குணங்களை மட்டுமே பார்க்க முயல்கின்ற ஒரு சாதாரண குடிமகன். அவ்வளவே... 

No comments:
Post a Comment