29/11/2025

Dil Wale Dulhania Lejayenge

 


ஒருபடம் வெளிவந்த நாளில் இருந்து கிட்டத்தட்ட 30 வருடங்களாக ஒரு திரையரங்கில் ஓடுகிறது என்றால் நம்புவீர்களா?!!...ஆமாங்க....தில்வாலே துல்ஹானியா லே ஜயாங்கே....என்னும் படம் ஷாருக்கான் மற்றும் கஜோல் நடிப்பில் 1995ல் வெளிவந்து இன்னும் மும்பை மராத்தி மந்திர் என்னும் திரையரங்கில் காலைக் காட்சி மட்டும் ஓடுவதாக ஒரு செய்தியைக் கண்டு அதன் உண்மைத் தன்மையை பரிசோதித்தபோது உண்மைதான் என்று கண்டு வியந்து போனேன். அது எப்படி சாத்தியம்? என்னதான் நல்ல படமாக இருந்தாலும் எப்படி சாத்தியமானது என்கிற கேள்வி மட்டும் நிற்கவே இல்லை. தீவிரமாய்த் தேடியபோது கிடைத்த சில உண்மைகள் கீழே‌‌..

1. இன்னும் டிக்கெட் விலை 30/- முதல் 50/ரூபாயாகவே தொடர்கிறது.
2. தியேட்டர் அமைந்த பகுதி பேருந்து நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வருவதால் எப்போதும் யாரேனும் வருகிறார்கள்.
3. வார நாட்களில் 50-100 பேரும் வாரக் கடைசியில் 300 பேரும் வருகிறார்களாம்.
4. இவை எல்லாவற்றையும் விட படத்தின் கதையும் திரைக்கதையும் நடிப்பும்தான்..என்றால் அது மிகையே அல்ல....

ஆமாம்... நானும் இன்றுதான் நெட்பிளிக்சில்(Netflix) முழுமையாக அந்தப் படத்தைப் பார்த்தேன். எவ்வளவு அழகாக உணர்ச்சி பொங்க ஷாருக்கான், கஜோல், ஓம் பூரி....என்று சிறப்பாக நடித்துள்ளார்கள்!! ப்பா...
எல்லா காலத்திலும் பொருந்தும் கதை மற்றும் திரைமொழி கவிதைபோல் உள்ளது. பல இடங்களில் கண்ணீர் வரவழைக்கிறது. முதன் முதலில் ஷாருக்கான் நடிப்பில் வியந்தேன் என்றால் அது இப்படமே..... செம்ம...

பார்க்காதவர்கள் பார்த்துவிடுங்கள்...
எனக்குத் தெரிந்த வரையிலும் உலக வரலாற்றில் 30 வருடங்களாக திரையில் ஓடும் ஒரே திரைப்படம் இதுவே.....

✍️செ. இராசா
#dilwaledulhanialejayenge
#DDLJ

No comments: