சபலமென்ற ஒன்றுவந்து
.....தன்மைமாறும் முன்னரே
சடுதியாக ஓடிவந்து
.....காக்குமெந்தன் ஈசனே!
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
விபத்துதந்து விரைவிலன்று
....போகயெண்ணும் முன்னரே
விழிப்புதந்து விதியைமாற்றி
....ஒளியைத்தந்த நேசனே!
ஓம் நமசிவாய...
உபயமொன்று செய்வதற்கு
.....நானுமொன்றைத் தந்திடின்
உயிருமுந்தன் உடலுமுந்தன்
.... என்ன:ஈய ஈசனே!
ஓம் நமசிவாய
அபயமென்று வந்துவிட்டால்
....அள்ளியள்ளித் தருவியே
அற்பமைந்தன் கேட்பதென்ன?!
.... அர்த்தமாக்கு ராசனே!- எம்மை
......அர்த்தமாக்கு ஈசனே!!
No comments:
Post a Comment