26/11/2025

வாராரு வாராரு வைர அண்ணன்

 

வெற்றிவேலு முருகனோட பக்தரு அண்ணன்
மருதுபாண்டி வம்சத்தோட வீரரு
வேங்கபோல வேகங்கொண்ட வேந்தரு
அண்ணன்
தென்பாண்டி நாட்டோட மைந்தரு
வாராரு வாராரு வைர அண்ணன்
அண்ணன்
வாரி வாரித் தருவதில் வாழும் கர்ணன்
சிவகங்கச் சீமையோட சிங்கமே- நீங்க
தென்னாட்டின் அடையாளம் என்றுமே
அண்ணன் மனசு சுத்தமான தங்கமே- அவரு
பேரப்போல ஜொலிஜொலிக்கும் வைரமே.....
அள்ளித்தரும் வள்ளல்பாரி நெஞ்சமே...நாங்க
சொல்வதெல்லாம் மிகையில்ல கொஞ்சமே...
துள்ளிவரும் ஜல்லிக்கட்டு வீரமே-அண்ணன்
சிரிச்சாலே ஓடும்மனப் பாரமே
வாராரு வாராரு வைர அண்ணன்
அண்ணன்
வாரி வாரித் தருவதில் வாழும் கர்ணன்
கட்சிதாண்டி பழகுகின்ற உள்ளமே - நீங்க
காட்டுகின்ற அன்பில் இல்லை கள்ளமே
அத்தனைபேர் தேடிவாரார் தஞ்சமே-
அண்ணன்
மனசுக்குள்ள என்றும் இல்லை வஞ்சமே..
பாரபட்சம் பார்த்திடாத பாசமே -அண்ணன்
பார்வையில அனைவருமோர் தேசமே
கூடவர தப்புமட்டும் அஞ்சுமே- அண்ணன்
கோபுரத்தில் மின்னுகின்ற கலசமே!
வாராரு வாராரு வைர அண்ணன்
அண்ணன்
வாரி வாரித் தருவதில் வாழும் கர்ணன்

No comments: