சுயநலம் பெருகிய சுற்றங்கள் இங்கே
சுயபலம் பெருக்கிட சூத்திரம் எங்கே?
நயமுடன் பழகிடும் நரிகளும் இங்கே
தயவுடன் அணுகிட உறவுகள் எங்கே?
அழுவதைத் தருகிற ஊடகம் இங்கே
அழுவதைத் தடுக்கிற ஊர்க்கரம் எங்கே?
விழுகையில் வருகுது விமர்சனம் இங்கே
விழுவதைத் தாங்கிடும் உயர்சனம் எங்கே?
இருக்கையில் மறப்பவர் பலருமே இங்கே
இறந்தபின் நினைப்பவர் உண்மையில் எங்கே?
தருகையில் பெறுபவர் தரணியில் இங்கே
தரும்கையாய் மாறிட முனைபவர் எங்கே?
கவிதையில் கரைகிற கவிஞனும் இங்கே
கவிழ்கையில் கரம்தரும் கலைஞனும் எங்கே?
புவிதனில் வருபவர் புகலிடம் இங்கே
புவிதனை விடுபவர் புகுவதும் எங்கே?
No comments:
Post a Comment