கதிரவன் எழும்முன் 
காணொளியில் ஓர் கானம்...
மெல்லிசைப் பின்புலத்தில்..
துள்ளியதோர் ஓர் குரல்...
வருடும் நாதத்தில் 
மறந்தது காலம்...  
உருகிய தருணத்தில் 
ஊற்றியது கண்ணீர்...
....
நகைத்தாள் இல்லாள் 
உதைத்தாள் சொல்லால்
விளக்கேற்றா கண்களில்; நீர்  
வடிப்பது பொய்யென்றாள்...
விளக்குவதைக் கேளென்றேன் 
விளங்காவிடில் விலக்கென்றென்..
இசையே ஈசனென்றேன்...
ஈசனே இசையென்றேன்.. 
அவ்விரண்டும் ஒன்றென்றேன்.. 
அத்வைதம் அதுவென்றேன்..
என்னமோ? என்றுரைத்தாள்
எண்ணமே.....எல்லாமென்றேன்
No comments:
Post a Comment