தமிழ் மகள் இலக்கிய அமைப்பு, ,மல்ரி சிமார்ட் சொலுஷன் அமைப்பு  மற்றும் ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகாட்ஸ் இணைந்து வழங்கும்
*உலகச் சாதனை நிகழ்ச்சி*
திருக்குறளில் மரபுக்கவிதை.
ஒரு அதிகாரம் ஒரு பா ஒரு கவிஞர்.
காலம் உணர்ந்து 
.......கடமை புரிவோர்க்கே
ஞாலம் எனச்சொன்ன 
......ஞாலமறை- மூலமதைக்
காலம் தவறாமல் 
......கற்றுணர்ந்த பேரென்றும்
ஞாலத்தில் நிற்பார்கள் நன்று!
(1)
விடியும்முன் காகத்தை 
.........வென்றிடும் ஆந்தை
விடிந்தபின் சண்டையெனில்
........வீழ்ந்து- மடிவதுபோல்
வெற்றிமேல் வெற்றியுடன் 
.......வீறுகொண்ட ஹிட்லரை
வெற்றாக்கி விட்டதோர் போர்!
(2)
பேசுகின்ற நேரத்தில் 
.........பேசாமல் பின்வந்துப்
பேசுகின்றப் பேச்சைப் 
.........பெரிதாகப்- பேசுபவர்
பேசுவதை எல்லோரும்
..........பேசாமல் விட்டுவிட்டால்
பேசுவரோ பின்னென்றும் பேச்சு?!
(3)
செய்கின்ற நேரத்தில் 
........செய்வதைச் செய்தால்தான்
செய்தபலன் அத்தனையும் 
.......செய்ததுபோல் - கொய்திடலாம்
செய்வோம் எனச்சொல்லிச் 
.......செய்யாமல் விட்டுவிட்டால்
தெய்வமா செய்யும் செயல்?
(4)
எல்லாம் இருந்தும் 
.......எதிரிமுன் பின்வாங்கி
நல்லதோர் நேரத்தில் 
.......நச்சென்று- வல்லமையில்
பாயும் கிடாபோல்
......பலத்தோடு பாய்ந்தால்தான்
மாயும் பகைவரின் வம்பு
(5)
தவம்செய்யும் ஞானிபோல் 
.........தன்னோக்கில் நின்று
கவனமாய்க் கொக்குபோல் 
.........கவ்வி-  புவனத்தில்
வந்ததன் நோக்கத்தை 
.......வாழ்கின்ற நாட்களுக்குள்
சிந்தையில் பற்றச் சிறப்பு
(6)
No comments:
Post a Comment