#மலரே_மதுவே நீ வந்ததாலே
மயங்குது மனதல்லோ
.........நிலவே நிழலே நீ வந்ததாலே
.........இரங்குது உயிரல்லோ
ஒலியே மொழியே நீ என்பதாலே
கவிக்குது தமிழல்லோ
.........ஒளியே விழியே நீ கண்டதாலே
.........தெளிந்தது நானல்லோ
அடியே அடியே வாடி புள்ள
துடிக்கிற இளமை பாவம் புள்ள
சடுகுடு ஆட்டம் எதுக்கு புள்ள
சட்டுன்னு சரணம் பாடு புள்ள
சொல்லே பொருளே நீ வந்ததாலே
சீரும் சிறப்புமல்லோ
..........அணியே அழகே நீ வந்தததாலே
..........அசத்துதுன் குரலல்லோ
கனியே கனிவே நீ என்பதாலே
இனிக்குதுன் உறவல்லோ
..........பனியே பணிவே நீ தொட்டதாலே
..........படுத்துதுன் நினைவல்லோ
.....(அடியே....)
#என்ன_அழகு?
#வள்ளுவர்_திங்கள்_117

No comments:
Post a Comment