“இல்லை”

“இருக்கிறது”

“கண்டிப்பாக இல்லை”


“கண்டிப்பாக இருக்கிறது”


இருவருக்கும் கருத்து மோதல்
இறுதியில் கைகலப்பு


இருவருமே யோசித்தனர்....


இல்லாத ஓன்றை
இருப்பதாய் நினைப்பவனிடம்
இத்தனை மோதல் தேவைதானா?
என்று இவனும்.....
இருக்கின்ற ஒன்றுக்கு
இருப்பு அறியாதவனிடம்
இந்த மோதல் தேவைதானா?
என்று அவனும்....
இருவேறு திசையில் யோசித்தனர்


இரட்டைநிலையே
இவ்வுலகம் என்று அறியாமலேயே.....
ஆம்...
உண்டு- இல்லை
உண்மை- பொய்
இரவு-பகல்
மேடு- பள்ளம்
...........
...........
இப்படி இரட்டைநிலையில்தான்
இவ்வுலகம்.....
இப்போது கம்பராமாயணம் பாருங்கள்
**************************
வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
ஒண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால்.
**************************
வறுமை சிறிதும் இல்லாதலால் வண்மையின்
சிறப்புத் தெரிவதில்லை;
பகைகொண்டு போர்புரிபவர் இல்லாதலால்
உடல் வலிமையை உணர வழியில்லை;
பொய் பேசுவோர் இல்லாமையால் உண்மையின் பெருமை தெரிய வழியில்லை;
கேள்வி ஞானம் மிகுந்திருப்பதால் அங்கு அறியாமை சிறிதுமில்லை
**************************
ஆக
இதன்மூலம் அறிவது என்னவென்றால்
இல்லை என்பவர்களால்தான்
இருப்புநிலை உணரப்படுகிறது...
அறிவோம்......நன்றி

No comments:
Post a Comment