கோட்சேவின் கைகளுக்குள்
கொலைக்கருவி மறைந்ததைப்போல்
பல் இளிக்கும் தலைவருக்குள்
பலி உணர்வு இருக்குதய்யா..
கோட்சேவின் வணக்கத்திலே
அண்ணலுயிர் போனதைப்போல்
கொடுங்கோலர் வணக்கத்திலே
இன்றுமுயிர் போகுதய்யா...
ஆட்டிற்கு உணவளித்து
கழுத்தறுக்கும் மனிதரைப்போல்
ஓட்டிற்கு பணமளித்து
கழுத்தறுக்கும் கயவரைய்யா...
உயரத்தில் பறக்கையிலே
பிணம்தேடும் கழுகினைப்போல்
உயரத்தில் இருக்கையிலும்
பணம்தேடும் கூட்டமையா..





திருக்குறள்




தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
விளக்கம்
பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட
அவர்களின் கைக்குள்ளே கொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்கள் கண்ணீர் கொட்டி
அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும்.













No comments:
Post a Comment