மலைபோல மனசுன்னு
உயர்வாகச் சொல்வோமே
உயர்வாகச் சொல்வோமே- இப்போ
தலைகீழாப் போனதால
தடுமாறிப் போனோமே...
...தடம் மாறிப் போனோமே..
வயக்காட்ட வித்துப்புட்டு
வயநாடு வந்தோமே
வயநாடு வந்தோமே- இப்போ
கண்மூடிக் கண்திறந்தா
மண்மூடிக் கிடக்கோமே
...மலையத்தான் காணாமே
தென்பாண்டி நாட்டவிட்டு
மலைநாடு வந்தோமே
மலைநாடு வந்தோமே- இப்போ
திக்கேதும் தெரியலையே
திசைமாறிப் போனோமே
...திகைச்சேபோய் நிக்கோமே..
மலைச்சாமி கோவிலுக்கு
மறக்காம போனோமே
மறக்காம போனோமே - சாமி
மதிகோணல் ஆயிடுச்சோ
மலைகூட கரைஞ்சிடுச்சே
...மனசெல்லாம் உடைஞ்சிடுச்சே
No comments:
Post a Comment