17/08/2024

வத்தலும் தொத்தலுமாய்

 

வத்தலும் தொத்தலுமாய்
...... வந்தவர்கள் பின்நாளில்
குத்தலும் கொஞ்சலுமாய்
......கொக்கரித்தார்- உத்தமர்போல்
வக்கனையாய் எத்தனையோ
......வாக்குறுதி தந்திங்கே
தக்கவைத்தார் தன்குடியைத்
......தான்!

No comments: